ஒரு
செல்வச் செழிப்பான ஒரு மனிதரும் அவருக்கு ஒரே மகனும் இருந்தார்கள்.
இருவருக்குமே ஆபூர்வமான கலைப்பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகம்.
பிக்காசோவில் இருந்து ரஃபேல் வரையிலும் அனைத்துக் கலைஞர்களின்
படைப்புக்களும் அவர்கள் வசமிருந்தன. அவர்கள் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து கலை
உலகின் உன்னதப் படைப்புகளைப் புகழுவார்கள்.
அந்த சமயத்தில் வியட்நாம் போர் வெடித்தது. மகன் யுத்தத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டான். அந்த யுத்தத்தில் தன்னுடைய சக வீரன் இன்னொருவனைக் காக்க முயலும் போது குண்டடிபட்டு உயிர் துறந்தான். ஒரே மகனைப் பறிகொடுத்த வேதனை அந்தத் தகப்பன் பல நாட்கள் துக்கித்து இருந்தார்.
ஒரு மாதம் கழிந்து கிறிஸ்துமஸுக்கு முன் அவரது வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். வெளியே ஒரு இளைஞன் கையில் ஒரு பெரிய மூட்டையுடன் நின்று கொண்டிருந்தான்.
பேசத் தொடங்கினான்,
"ஐயா ! என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்கள் மகனுடன் பணியாற்றியவன். உங்கள் மகன் என்னையும் , என்னைப் போன்ற பலரையும் காப்பாற்றும்போதுதான் குண்டு பட்டு இறந்து போனான். அவன் அடிக்கடி உங்களைப் பற்றியும் , நீங்கள் ஓவியங்களின் மீது கொண்டுள்ள நேசத்தைப் பற்றியுமே பேசுவான்" என்றபடி தன் கையில் இருந்த மூட்டையைப் பிரித்தான்.
"ஐயா, நான் ஒரு சிறப்பான ஓவியனல்ல. இருந்தாலும், எங்கள் உயிரைக் காப்பாற்ற உங்கள் மகன் குதிரையில் வீரமாய் சண்டையிட்ட காட்சி மனதில் பதிந்து விட்டது. அதுவே என்னை ஓவியனாக்கி விட்டது " என்றபடி ஒரு ஓவியத்தை அவரிடம் கொடுத்து விட்டு அழுதான்.
படம் அத்தனை நேர்த்தியில்லைதான். அவரிடம் இருந்த வான்கோ, பிக்காஸோ ஓவியங்கள் போன்ற கலைநயமும் அதில் இல்லை. இருந்தாலும் மகனை நேரில் பார்ப்பது போன்றதொரு உணர்வில் தகப்பன் அழுதார்.
"உங்கள் செய்த தியாகத்திற்குக் கைமாறு செய்ய என்னால் இயலாது. என்னாலானது இதுதான் " என்று கூறிக் கண்ணீருடன் விடைபெற்றான்.
தகப்பன் அதனை வீட்டின் முக்கியமான இடத்தில் தொங்கவிட்டு, வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் தன்னுடைய மற்ற புகழ் பெற்ற ஓவியங்களுடன், தன் மகனின் படத்தையும் காண்பிக்கத் தொடங்கினார்.
கொஞ்ச காலத்தில் அவரும் இறத்து போனார். வாரிசு இல்லாததால் உலகப் புகழ் பெற்ற கலைஞர்களின் படைப்புகள் எல்லாம் ஏலத்துக்கு வந்தது . அரிய ஓவியங்கள் என்பதால் ஏலம் எடுக்கக் கூட்டம் அலைமோதியது. அதில் மகனின் ஓவியமும் இருந்தது.
ஏலதாரர் முதலில் மகனின் ஓவியத்தை எடுத்தார்.
" இதற்கு முதலில் யார் விலை கேட்கப் போகிறீர்கள்" என்றார் . பிக்காஸோவையும் , லியோனர் டோ டாவின்ஸியையும் எதிர்பார்த்து வந்த கூட்டம் , இதைப் பார்த்ததும் முகம் சுளித்தது . யாருமே ஏலம் கேட்கவில்லை.
ஏலதாரர் சொன்னார் ,
" இதற்கு நானே விலை வைக்கிறேன்" என்று சொல்லி ஆரம்பித்தார்.
"பத்தாயிரம் , பத்தாயிரம் " . யாருமே ஏலம் கேட்கவில்லை . இப்போது தொகையைப் பாதியாகக் குறைத்து ஐயாயிரமாக்கினார். இப்போதும் பதிலில்லை. கூட்டத்தில் ஒருவர் சொன்னார் , " ஐயா , ஏலதாரரே! இதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வேறு நல்ல ஓவியத்தை எடுங்கள். எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் " என்றார். ஏலதாரரோ ,
"இந்த ஓவியத்தை ஏலம் விட்ட பிறகுதான் மற்றவற்றை ஏலம் விட முடியும் " என்று மறுத்துவிட்டார்.
"மகனின் ஓவியம் . ரூபாய் ஆயிரம் . யாருக்காவது வேண்டுமா? " அப்போது ஒரு ஏழைத் தோட்டக்காரர் வாய் திறந்தார்.
" ஐயா. எங்கிட்ட முன்னூறு ரூபாய்தான் இருக்குது. மகனின் ஓவியத்தை எனக்குத் தருவீர்களா ?"
"முன்னூறு ஒரு தரம் . இரண்டாம் தரம் . மூன்றாம் தரம் " ஏலம் முடிந்தது.
இப்போது ஒருவர் கேட்டார் ,
"அதான் மகனின் ஓவியம் ஏலம் போய் விட்டதே . மற்ற ஓவியங்களை ஏலம் விடலாமே " என்றார் . ஏலதாரர் சொன்னார் ,
" ஏலம் முடிந்துவிட்டது. இந்தப் படங்களின் சொந்தக்காரர்
ஒரு உயிலையும் எழுதி வைத்திருக்கிறார். மகனின் ஓவியத்தை விரும்பி ஏலம் எடுக்கும் ஒருவருக்கு , தம்முடைய மற்ற ஓவியங்களும் , வீடும் , தோட்டமும் சொந்தம் என்று. இனி எல்லாமே சட்டப்படி அவருக்குத்தான் . நீங்களெல்லாம் கிளம்பலாம் " என்றார்.
பிதாவானவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை 2000 ஆண்டுகளுக்கு முன்பாய் , நமக்காகக் கோர சிலுவையில் பலியாகும்படி ஒப்புக் கொடுத்தார்.
அந்த ஏலதாரரைப் போலவே இன்று உங்களிடம் கேட்கின்றார் ,
" இதோ குமாரன்.யாருக்கு வேண்டும்? யாருக்கு வேண்டும்? " என்று உங்களை நோக்கிக் கேட்கிறார்.
நீ குமாரனை சொந்தமாக்கிக் கொள்வாயா? நீ உன்னுடைய சொந்த இரட்சகராய் அவரை ஏற்றுக் கொள்ளும் போது உனக்குக் கிடைக்கும் வெகுமதிகள் உலகிலுள்ள எதனையும் விட மேலானதாய் , நீ கற்பனையில் கூடக் காண முடியாததாக இருக்கும். ஏசுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மிகப் பெரிய வெகுமதிகளை அடைவார்கள்.
"அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் "
சங்கீதம் 2 :12
அந்த சமயத்தில் வியட்நாம் போர் வெடித்தது. மகன் யுத்தத்தில் கலந்துகொள்ளப் புறப்பட்டான். அந்த யுத்தத்தில் தன்னுடைய சக வீரன் இன்னொருவனைக் காக்க முயலும் போது குண்டடிபட்டு உயிர் துறந்தான். ஒரே மகனைப் பறிகொடுத்த வேதனை அந்தத் தகப்பன் பல நாட்கள் துக்கித்து இருந்தார்.
ஒரு மாதம் கழிந்து கிறிஸ்துமஸுக்கு முன் அவரது வீட்டுக் கதவை யாரோ தட்டினார்கள். வெளியே ஒரு இளைஞன் கையில் ஒரு பெரிய மூட்டையுடன் நின்று கொண்டிருந்தான்.
பேசத் தொடங்கினான்,
"ஐயா ! என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்கள் மகனுடன் பணியாற்றியவன். உங்கள் மகன் என்னையும் , என்னைப் போன்ற பலரையும் காப்பாற்றும்போதுதான் குண்டு பட்டு இறந்து போனான். அவன் அடிக்கடி உங்களைப் பற்றியும் , நீங்கள் ஓவியங்களின் மீது கொண்டுள்ள நேசத்தைப் பற்றியுமே பேசுவான்" என்றபடி தன் கையில் இருந்த மூட்டையைப் பிரித்தான்.
"ஐயா, நான் ஒரு சிறப்பான ஓவியனல்ல. இருந்தாலும், எங்கள் உயிரைக் காப்பாற்ற உங்கள் மகன் குதிரையில் வீரமாய் சண்டையிட்ட காட்சி மனதில் பதிந்து விட்டது. அதுவே என்னை ஓவியனாக்கி விட்டது " என்றபடி ஒரு ஓவியத்தை அவரிடம் கொடுத்து விட்டு அழுதான்.
படம் அத்தனை நேர்த்தியில்லைதான். அவரிடம் இருந்த வான்கோ, பிக்காஸோ ஓவியங்கள் போன்ற கலைநயமும் அதில் இல்லை. இருந்தாலும் மகனை நேரில் பார்ப்பது போன்றதொரு உணர்வில் தகப்பன் அழுதார்.
"உங்கள் செய்த தியாகத்திற்குக் கைமாறு செய்ய என்னால் இயலாது. என்னாலானது இதுதான் " என்று கூறிக் கண்ணீருடன் விடைபெற்றான்.
தகப்பன் அதனை வீட்டின் முக்கியமான இடத்தில் தொங்கவிட்டு, வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் தன்னுடைய மற்ற புகழ் பெற்ற ஓவியங்களுடன், தன் மகனின் படத்தையும் காண்பிக்கத் தொடங்கினார்.
கொஞ்ச காலத்தில் அவரும் இறத்து போனார். வாரிசு இல்லாததால் உலகப் புகழ் பெற்ற கலைஞர்களின் படைப்புகள் எல்லாம் ஏலத்துக்கு வந்தது . அரிய ஓவியங்கள் என்பதால் ஏலம் எடுக்கக் கூட்டம் அலைமோதியது. அதில் மகனின் ஓவியமும் இருந்தது.
ஏலதாரர் முதலில் மகனின் ஓவியத்தை எடுத்தார்.
" இதற்கு முதலில் யார் விலை கேட்கப் போகிறீர்கள்" என்றார் . பிக்காஸோவையும் , லியோனர் டோ டாவின்ஸியையும் எதிர்பார்த்து வந்த கூட்டம் , இதைப் பார்த்ததும் முகம் சுளித்தது . யாருமே ஏலம் கேட்கவில்லை.
ஏலதாரர் சொன்னார் ,
" இதற்கு நானே விலை வைக்கிறேன்" என்று சொல்லி ஆரம்பித்தார்.
"பத்தாயிரம் , பத்தாயிரம் " . யாருமே ஏலம் கேட்கவில்லை . இப்போது தொகையைப் பாதியாகக் குறைத்து ஐயாயிரமாக்கினார். இப்போதும் பதிலில்லை. கூட்டத்தில் ஒருவர் சொன்னார் , " ஐயா , ஏலதாரரே! இதை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, வேறு நல்ல ஓவியத்தை எடுங்கள். எங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் " என்றார். ஏலதாரரோ ,
"இந்த ஓவியத்தை ஏலம் விட்ட பிறகுதான் மற்றவற்றை ஏலம் விட முடியும் " என்று மறுத்துவிட்டார்.
"மகனின் ஓவியம் . ரூபாய் ஆயிரம் . யாருக்காவது வேண்டுமா? " அப்போது ஒரு ஏழைத் தோட்டக்காரர் வாய் திறந்தார்.
" ஐயா. எங்கிட்ட முன்னூறு ரூபாய்தான் இருக்குது. மகனின் ஓவியத்தை எனக்குத் தருவீர்களா ?"
"முன்னூறு ஒரு தரம் . இரண்டாம் தரம் . மூன்றாம் தரம் " ஏலம் முடிந்தது.
இப்போது ஒருவர் கேட்டார் ,
"அதான் மகனின் ஓவியம் ஏலம் போய் விட்டதே . மற்ற ஓவியங்களை ஏலம் விடலாமே " என்றார் . ஏலதாரர் சொன்னார் ,
" ஏலம் முடிந்துவிட்டது. இந்தப் படங்களின் சொந்தக்காரர்
ஒரு உயிலையும் எழுதி வைத்திருக்கிறார். மகனின் ஓவியத்தை விரும்பி ஏலம் எடுக்கும் ஒருவருக்கு , தம்முடைய மற்ற ஓவியங்களும் , வீடும் , தோட்டமும் சொந்தம் என்று. இனி எல்லாமே சட்டப்படி அவருக்குத்தான் . நீங்களெல்லாம் கிளம்பலாம் " என்றார்.
பிதாவானவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை 2000 ஆண்டுகளுக்கு முன்பாய் , நமக்காகக் கோர சிலுவையில் பலியாகும்படி ஒப்புக் கொடுத்தார்.
அந்த ஏலதாரரைப் போலவே இன்று உங்களிடம் கேட்கின்றார் ,
" இதோ குமாரன்.யாருக்கு வேண்டும்? யாருக்கு வேண்டும்? " என்று உங்களை நோக்கிக் கேட்கிறார்.
நீ குமாரனை சொந்தமாக்கிக் கொள்வாயா? நீ உன்னுடைய சொந்த இரட்சகராய் அவரை ஏற்றுக் கொள்ளும் போது உனக்குக் கிடைக்கும் வெகுமதிகள் உலகிலுள்ள எதனையும் விட மேலானதாய் , நீ கற்பனையில் கூடக் காண முடியாததாக இருக்கும். ஏசுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மிகப் பெரிய வெகுமதிகளை அடைவார்கள்.
"அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் "
சங்கீதம் 2 :12
No comments:
Post a Comment