Wednesday, October 26, 2016

POONAI ILLAMAL PAADAMA TAMIL STORY

பூனை இல்லாமல் பாடமா?

உடனே அந்த பூனையை பிடித்து பக்கத்தில் உள்ள மரத்தில் கட்டிவைக்குமாறு குரு உத்தரவிட்டார்.

பூனை கட்டப்பட்டதும் குரு தொடர்ந்து பாடம் நடத்தலானார். மறு நாள் குரு பாடம் கற்பிக்கும் வேளை பூனை மீண்டும் தனது விளையாட்டை ஆரம்பித்தது.

மீண்டும் பூனையை கட்டி வைக்குமாறு உத்தரவிட்டார் குரு. இவ்வாறு பூனை தொடர்ந்து தொல்லை பண்ணியதால் பூனையை பாடம் ஆரம்பிப்பதற்க்கு முன்னர் கட்டி வைப்பதும் பாடம் முடிந்ததும் அவிழ்த்து விடுவதும் வழக்கமாகிப் போனது.

சில காலத்தில் குரு இறந்து போனார். அந்த குருகுலத்தின் தலைமை சீடன் குருவாக மாறினார். வழக்கம் போல் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. அந்த பூனை தொடர்ச்சியாக கட்டபட்டு வந்தது.

ஒரு நாள் பாடம் நடத்த வந்த குரு பூனை கட்டப்படும் மரத்தில் பூனை கட்டபடாதை கண்டு கோபங்கொண்டு சீடர்களை பார்த்து, "முட்டாள்களே பூனையை ஏன் கட்டவில்லை?" என்று கத்தினார்.

அப்போது சீடர்கள் சொன்னார்கள். "குருவே அந்த பூனை இறந்து விட்டது. அதுதான் பூனை கட்டவில்லை" என்றார்கள்.

உடனே குரு, முட்டாள்களே பூனை கட்டாமல் எப்படி பாடம் கற்பிப்பது? நமது குரு பூனை கட்டி வைத்து அல்லவா பாடம் நடத்துவார். இப்போது பூனை இல்லாமல் எப்படி பாடம் நடத்துவது? .உடனடியாக அடுப்பங்கறைக்குப் போய் அங்கே இருக்கும் பூனை ஒன்றை கொண்டு வந்து இங்கே கட்டுங்கள்" என்று உத்தரவிட்டார்.

பின் பூனை கட்டப்பட்டது பாடம் கற்பிக்கப்பட்டது.

இப்படித்தான் உண்மை அறியாமல் மூடநம்பிக்கைகள் முன்னோரால் கடைப்பிடிக்கப்பட்டது என்று தொடர்ந்து விடுகிறது.

No comments:

Post a Comment