Friday, August 26, 2016

ottrumaiyin balan tamil story

ஒற்றுமையின் பலம்!

சில புறாக்கள் இரை தேடி பறந்து திரிந்தன. இறுதியில் ஓர் இடத்தில் அரிசி
மணிகள் சிதரிக்கிடப்பதைக் கண்டன.

ஆர்வதுடனே அங்கே இறங்கி அமர்ந்தன. அரிசியை பொறுக்கி திண்ண தொடங்கின.
திடீரென ஒரு வலை அவைகளின் மீது விழுந்தது.அதில் அவை சிக்கிக் கொண்டன வலையை வைத்திருந்த வேடன் வேகமாக வந்து கொண்டிருந்தான். அவை பயந்து மனம் கலங்கின.

அவைகளின் தலைவனுக்கு ஒரு தைரியம் உண்டாயிற்று. பயபடாதீர்கள் . வலையை அப்படியே கவ்விப்பிடித்து ஒற்றுமையாய் பறந்து செல்வோம் என்று உத்தரவு போட்டது. அதன் படியே புறாக்கள் வலையை அலகால் பிடித்துகொண்டு ஒற்றுமையாய் பறந்து சென்றன.வேடன் பின் தொடர்ந்து ஓடிப் பாத்தான்.முடியவில்லை.

ஒரு எலியின் வளை அருகே அவை தரை இறங்கின . எலி வெளியே வந்து தன் கூறிய பற்களால் வலையை கடித்து புறாக்களை விடுவித்தது. அவை எலிக்கு நன்றி சொல்லிவிட்டு உற்சாகமாக மீண்டும் பறந்து சென்றன.

No comments:

Post a Comment